-
குறிப்புகள்: படைக்காட்சிப் படலம்
புதுப்புனல் 566 நேற்றைய அமர்வில் படைக்காட்சிப் படலத்தை தொடங்கி அதன் முதல் 28 பாடல்களை பேசினோம். முன்னரே வாசித்துவரச் சொல்லப்பட்டிருந்ததால் பாடல்களை முழுமையாக தொடக்கத்திலேயே வாசித்து நேரடியாக உரையாடலுக்குள் நுழைந்தோம். Lakshmi Narayanan அமர்வை மட்டுறுத்தினார். முதற்போர் புரி படலத்தில் இராவணன் அனுப்பிய தூதர் உலகம் முழுதும் இருந்து அரக்கர் என இருப்பவர் அனைவரையும் படையெனத் திரட்டி அழைத்து வந்துள்ளனர். மைந்தன் இறப்புக்குப் பின்பான மனநிலையில் இருக்கும் இராவணன் சிறிய உற்சாகத்துடன் கோபுரமேறி அவர்கள் இலங்கை நுழைவதை…
-
செஞ்சொற் கவி இன்பம் – பார்கவி
காதலினால் மானிடற்கு கவிதைகள் உண்டாம் என்ற பாரதி, கல்யாணம் செய்துகொண்டால் என்னாகும் என்று சொல்லவில்லை. இன்று இந்த வரியை வாசிப்பவர்கள், இதற்குப் பகடியாக பதிலை சொல்லிவிட முடியும். நவீன கவிதைகளில், காதல் ஏற்றப்பட்ட அளவுக்கு திருமண உறவு ஏற்றம் பெறவில்லை. இந்தப் பிளவு வள்ளுவரிலும் உண்டு. காமத்துப்பாலில் ‘இல்வாழ்க்கை’யும் ‘வாழ்க்கைத் துணைநல’மும் ‘மக்கட்பேறு’ம் இல்லை. அவை அறத்துப்பாலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்றன. இத்தனைக்கும் காமத்துப்பாலில் சங்கமரபின்படி ‘களவியல்’ ‘கற்பியல்’ இரண்டுமே அமைந்திருக்கிறது. பிரிந்தவர் கூடி,…
