-
அன்பென்ற ஒன்று : பார்கவி
நாம் எதிர் நாயகர்களின் உலகில் வாழ்கிறோம். நவீன உலகில் வாழ்பவருக்கு மீட்பர்கள் மீதான நம்பிக்கை இயல்பாக இற்றுப் போய்விட்டது. காவியங்கள் போலவே காவிய நாயகர்கள் மீதான விமர்சனப்பார்வையும் கூர்மையாகிவிட்டன. காவிய உலகமும் ஒரு விதத்தில் எதிர் நிலை பாத்திரங்களுக்கானவை என்றாலும் இங்கு எதிர் நிலை கதாபாத்திரங்கள் ஆதர்சம் இல்லை என்பதே முக்கிய வேறுபாடு. கம்பன் தனது காவிய முயற்சியில் ராவணனை ஆசையில் அறிவிழந்த பித்தனாகவே சித்தரிக்கிறார். சீதையை தீக்குள் இறங்கச் சொன்ன அன்றே நாம் ராமனை சற்று…
-
காயத்துயிரே விடு காலையினும் மாயத்தொழில் செய்யா அதிகாயன் – மதுநிகா சுரேஷ்
நான் இம்பர்வாரி குழுவில் அதிகாயன் வதைப் படலம் குறித்து ஒரு உரை ஆற்றுவதற்காக அதிகாயனை பற்றிய குறிப்புகள் நூல்களில் தேடிக்கொண்டிருந்தேன். கும்பகர்ணன், வாலி, இந்திரஜித்தின் போன்ற பெரும் வீரர்களை பற்றி குறிப்புகள் கிடைத்தது. ஆனால் மாயத்தை பயன்படுத்தாமல் நேர்வழியில் போரிட்ட அதிகாயன் பற்றி யாரும் அதிகமாக எழுதவில்லை. எனக்கு அது வருத்தமாக இருந்தது. இதுவரை கம்பராமாயணம் குறித்து எழுதும் தைரியம் இல்லாத நான் அதிகாயனுக்காக எழுதுகிறேன். ஒரு மன்னனிடம் அறம் இருந்தால் மட்டுமே அவன் நிலையான அரசை நிறுவ முடியும் என்பதை…
-
ஆரண்யத்தால் அடைவன – ரா. சிவமீனாட்சி செல்லையா
பண்டு, நமது மரபில் வனம் செல்வதென்பது நிகழ்வதே. துறந்தவர் மெய்மை நாடி செல்வர்; வயதில் முதிர்ந்தவர், தன்னிறுதி வனத்தில் நிகழ விழைந்து, வனப்பிரஸ்தம் மேற்கொள்வர்; வேந்தர்கள் வேட்டையாட தனித்தும் படை சூழவும் வனத்திற்கு ஏகுவர்; இவ்வாறும், இன்னும் பலவகை காரணங்களுக்காகவும் வனம் புகுதல் நிகழலாம். நம்முடைய இரு பெரும் இதிகாசங்கள் இரண்டிலும் கதை நாயகர்கள் வனம்புகுதல் முக்கிய நிகழ்வாகிறது. அணுக்க உறவுகளின் மன இருளினால் நாயகர்களை அல்லலுக்குள்ளாக்க திட்டமிடப்படும் அது, அவர்கள் பொலிவதற்கும், அரியனவற்றை அடைவதற்குமான காலமாய்…
-
காட்டின் நெறி – கா. சிவா
2023 – ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று ஒரு உரையாடலில் “கம்பராமாயணத்திற்கு பல்வேறு உரைகள் உள்ளன. அதன் சொல்லாட்சிகளும் அழகியலும் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. கம்பராமாயணம் கூறும் வேல்யூஸ் (values) பற்றி இப்போது பேசப்படவேண்டும்” என வேறு சொற்களில் ஆசிரியர் ஜெயமோகன் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட வேல்யூ என்பதை விழுமியம் அல்லது நெறி என்று நான் எடுத்துக்கொண்டேன். கம்பராமாயணம் என்னும் காப்பியத்தில் நெறிகளை கம்பர் ஒட்டு மொத்தமாக ஒரேயிடத்தில் சொல்லாமல் கதையின் போக்கிற்கேற்ப பொருத்தமான இடங்களில் கூறிச் செல்கிறார்.…
