• அன்பென்ற ஒன்று : பார்கவி

    நாம் எதிர் நாயகர்களின் உலகில் வாழ்கிறோம். நவீன உலகில் வாழ்பவருக்கு மீட்பர்கள் மீதான நம்பிக்கை இயல்பாக இற்றுப் போய்விட்டது. காவியங்கள் போலவே காவிய நாயகர்கள் மீதான விமர்சனப்பார்வையும் கூர்மையாகிவிட்டன. காவிய உலகமும் ஒரு விதத்தில் எதிர் நிலை பாத்திரங்களுக்கானவை என்றாலும் இங்கு எதிர் நிலை கதாபாத்திரங்கள் ஆதர்சம் இல்லை என்பதே முக்கிய வேறுபாடு. கம்பன் தனது காவிய முயற்சியில் ராவணனை ஆசையில் அறிவிழந்த பித்தனாகவே சித்தரிக்கிறார். சீதையை தீக்குள் இறங்கச் சொன்ன அன்றே நாம் ராமனை சற்று… Continue reading

  • காயத்துயிரே விடு காலையினும் மாயத்தொழில் செய்யா அதிகாயன் – மதுநிகா சுரேஷ்

    நான் இம்பர்வாரி குழுவில் அதிகாயன் வதைப் படலம் குறித்து ஒரு உரை ஆற்றுவதற்காக அதிகாயனை பற்றிய குறிப்புகள் நூல்களில் தேடிக்கொண்டிருந்தேன். கும்பகர்ணன், வாலி, இந்திரஜித்தின் போன்ற பெரும் வீரர்களை பற்றி குறிப்புகள் கிடைத்தது. ஆனால் மாயத்தை பயன்படுத்தாமல் நேர்வழியில் போரிட்ட அதிகாயன் பற்றி யாரும் அதிகமாக எழுதவில்லை. எனக்கு அது வருத்தமாக இருந்தது. இதுவரை கம்பராமாயணம் குறித்து எழுதும் தைரியம் இல்லாத நான் அதிகாயனுக்காக எழுதுகிறேன். ஒரு மன்னனிடம் அறம் இருந்தால் மட்டுமே அவன் நிலையான அரசை நிறுவ முடியும் என்பதை… Continue reading

  • குறிப்புகள்: படைக்காட்சிப் படலம்

    புதுப்புனல் 566 நேற்றைய அமர்வில் படைக்காட்சிப் படலத்தை தொடங்கி அதன் முதல் 28 பாடல்களை பேசினோம். முன்னரே வாசித்துவரச் சொல்லப்பட்டிருந்ததால் பாடல்களை முழுமையாக தொடக்கத்திலேயே வாசித்து நேரடியாக உரையாடலுக்குள் நுழைந்தோம். Lakshmi Narayanan அமர்வை மட்டுறுத்தினார். முதற்போர் புரி படலத்தில் இராவணன் அனுப்பிய தூதர் உலகம் முழுதும் இருந்து அரக்கர் என இருப்பவர் அனைவரையும் படையெனத் திரட்டி அழைத்து வந்துள்ளனர். மைந்தன் இறப்புக்குப் பின்பான மனநிலையில் இருக்கும் இராவணன் சிறிய உற்சாகத்துடன் கோபுரமேறி அவர்கள் இலங்கை நுழைவதை… Continue reading

  • Against Unpoetic Laurels – A Statement From Imbarvari Literary Circle

    As organizers of the Imbarvari Literary Circle and ardent readers of the ancient Tamil poet Kamban, we express our deep distress over the conferring of the prestigious Jnanpith Award on lyricist and self-styled ‘Kavipperarasu’ Vairamuthu. We would like to remind readers and the public that the title Kavi Perarasu (the king of poetry) is a… Continue reading

  • செஞ்சொற் கவி இன்பம் – பார்கவி

    காதலினால் மானிடற்கு கவிதைகள் உண்டாம் என்ற பாரதி, கல்யாணம் செய்துகொண்டால் என்னாகும் என்று சொல்லவில்லை. இன்று இந்த வரியை வாசிப்பவர்கள், இதற்குப் பகடியாக பதிலை சொல்லிவிட முடியும். நவீன கவிதைகளில், காதல் ஏற்றப்பட்ட அளவுக்கு திருமண உறவு ஏற்றம் பெறவில்லை. இந்தப் பிளவு வள்ளுவரிலும் உண்டு. காமத்துப்பாலில் ‘இல்வாழ்க்கை’யும் ‘வாழ்க்கைத் துணைநல’மும் ‘மக்கட்பேறு’ம் இல்லை. அவை அறத்துப்பாலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்றன. இத்தனைக்கும் காமத்துப்பாலில் சங்கமரபின்படி ‘களவியல்’ ‘கற்பியல்’ இரண்டுமே அமைந்திருக்கிறது. பிரிந்தவர் கூடி,… Continue reading

  • நெய்குழல் உறும் இழை – லக்ஷ்மி நாராயணன்

    “வளையொடு திகிரியும்‌, வடவை தீதரவிளைதரு கடுவுடை விரிகொள்‌ பாயலும்,‌இளையவர்கள்‌ என அடி பரவி ஏக நாம்வளைமதில்‌ அயோத்தியில்‌ வருதும்” (201, பால காண்டம்) வடவாமுகாக்கினியும் கரிந்து போகும் அளவிற்கு பொங்கு விஷம் (சினம்) கொண்ட ஆதிசேஷனின் அவதாரம் இலக்குவன். காப்பியம் முழுக்க ராமனைத் தொடர்ந்து வந்தாலும் கம்பராமாயண உரைகளிலோ, ஆய்வுகளிலோ அதிகம் பேசப்படாதவன் இலக்குவன். பரதனோ, குஹனோ, வீடணனைப்பற்றியோ எழுதப்பட்டதை விட இலக்குவன் பற்றி எழுதப்பட்டது மிகக்குறைவு. அனுமனைப் பற்றி சொல்லவே தேவை இல்லை. வனவாசம் ராமனுக்கு… Continue reading

  • ஆரண்யத்தால் அடைவன – ரா. சிவமீனாட்சி செல்லையா

    பண்டு, நமது மரபில் வனம் செல்வதென்பது நிகழ்வதே. துறந்தவர் மெய்மை நாடி செல்வர்; வயதில் முதிர்ந்தவர், தன்னிறுதி வனத்தில் நிகழ விழைந்து, வனப்பிரஸ்தம் மேற்கொள்வர்; வேந்தர்கள் வேட்டையாட தனித்தும் படை சூழவும் வனத்திற்கு ஏகுவர்; இவ்வாறும், இன்னும்  பலவகை காரணங்களுக்காகவும் வனம் புகுதல் நிகழலாம். நம்முடைய இரு பெரும் இதிகாசங்கள்  இரண்டிலும் கதை  நாயகர்கள் வனம்புகுதல் முக்கிய நிகழ்வாகிறது. அணுக்க உறவுகளின் மன இருளினால்  நாயகர்களை அல்லலுக்குள்ளாக்க திட்டமிடப்படும் அது, அவர்கள் பொலிவதற்கும், அரியனவற்றை அடைவதற்குமான காலமாய்… Continue reading

  • லங்காதகனம் – பிரபு

    சுந்தர காண்டத்தில் உள்ள இலங்கை எரியூட்டு படலத்தை பற்றி சில சொற்கள் முன்வைக்க நினைக்கிறேன். சுருக்கமாச் சொன்னால் சீதையைத் தேடிப் போகின்ற அனுமன் இலங்கையை எரிக்கின்றான்.  படலத்திற்குள் செல்வதற்கு முன் ஒரு வரலாற்று நிகழ்வில் இருந்து தொடங்குவோம். நமக்கு தெரிய சமீபத்தில் நடந்த பெரும் போர்களில் ஒன்று இரண்டாம் உலகப் போர். அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டை வீசும் போது அப்போர் முடிவுக்கு வருகிறது. அணுகுண்டை நாம்  நெருப்பின் நவீன வடிவம் (மாடர்ன்… Continue reading

  • போரும் குரங்கும் 2 – கமலநாதன், விஜயபாரதி

    கமலநாதன்: இலங்கை மாநகர் ஒரு குரங்கினால் சின்னாபின்னப் படுத்தப்படுகிறது. அரக்க வேந்தன் ஆர்வமாக போற்றிக் காத்த அசோகவனம் அழிக்கப்படுகிறது. எனவே இப்படி ஒரு ஆணை இடுகிறான், “வல்லையின் அகலா வண்ணம்,  வானையும் வழியை மாற்றி  கொல்லலிர் குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்தீர் என்றான் .” ஏதோ ஒரு சாதாரண குரங்கை பிடிக்கச் சென்று அதை அடித்து நசுக்கி விடாமல் என்னிடம் உயிருடன் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இடுகிறான். 60,000 கிங்கரர்களும், பஞ்ச சேனாதிபதிகளும், ஜம்புமாலியும் கொல்லப்படுகிறார்கள். இவர்கள்… Continue reading

  • அருந்துயர், நெடுந்துயர் – பார்கவி

    [1] என் நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட நிபந்தனையுடன் புத்தகப் பரிந்துரை கேட்பதுண்டு. துயரத்தின் சாயலின்றி இருக்க வேண்டுமாம். அது தானே நம் வாழ்க்கையின் லட்சியமும். படக்கதைகளைக் கூட பரிந்துரைக்க முடியாத நிபந்தனை அது என்பதை முன்னெச்சரிக்கையாக சொல்லிவிடுவேன். துயரம் வெறும் துயரமாகவே கையளிக்கப் படக்கூடாது என்பதே அவர்களுடைய உள்ளக்கிடக்கையாக இருக்கக்கூடும். அத்தனை பேரிலக்கியங்களும் மானுட துயரின் வழியாக இன்னொன்றை பேசும் பொருட்டே எழுதப்பட்டிருக்கின்றன. அவை இருக்க மிகப் பெரும்பான்மையினர் தித்திப்பு காதல் அல்லது கூர்வன்முறை வகை புத்தகங்களை,… Continue reading