போர்

  • அங்கம் யாவையும் 2 – ஸ்ரீநிவாஸ்

    அங்கம் யாவையும் 1 நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன்ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, இலங்கும்கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ;(9650) கைகளுக்கு கோதையும் விரற்புட்டிலும் கட்டி, புயங்களில் கங்கணம் மாட்டுவதைச் சொல்கிறது அடுத்த பாடல். இருபது ஆகிய இராவணனின் கரங்களில், பரந்த தலை கொண்ட அனந்தனின் நஞ்சு தங்கிய கழுத்தில் கறை கிடந்தது போல கோதையும் விரற்குழல்களும். அனந்தனின் தலைகள் பலவாக விரிந்த… Continue reading

  • அங்கம் யாவையும் 1 – ஸ்ரீநிவாஸ்

    (இராவணன் தேர் ஏறு படலத்தை முன்வைத்து) இராவணன் இனி போருக்கு அனுப்ப யாரும் உயிருடனில்லை. எஞ்சியிருந்த ஒரே மைந்தன் மூத்தவன் இந்திரசித்தன் இலக்குவனால் கொல்லப்பட்டான். அரக்கர் என பூலோகம் வாழ்ந்திருந்த அனைவரும் மூதாதை உருவென இராவணனை துணைக்க வந்தவர்கள் இராமனால் இல்லாமலானார்கள். உடன்பிறந்தான், பிள்ளைகள், அமைச்சர்கள், தோழர்கள் என சுற்றம் எவருமில்லை. எஞ்சியவர்களை இறுதியாக ஒருமுறை களமுகப்புக்கு வரச்சொல்லிவிட்டு இராவணன் கடைசிப் போருக்கு தயாராகிறான். அவன் படையணிகள் அணிந்து ஒருக்கமாவதையும், அவனுக்கான தேரில் புறப்பட்டு போர்முகப்புக்கு வருவதையும்… Continue reading

  • இருள் பருகும் பகழி – பார்கவி

    கம்பனின் பத்தாயிரம் பாடல்களை ஒவ்வொன்றாக வாசித்து விவாதித்து கடந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கையில் சற்று வியப்பாகவே இருக்கிறது. அதை ஒட்டி என்ன எழுதலாம் என்று யோசித்த பொழுது, ராவணன் செலுத்தும் தாமதாத்திரத்தை (தாமசாஸ்திரம்) ராமன் சிவ நாமம் செப்பி ஞானத்திரத்தை அனுப்பித் தகர்க்கும் பாடலைப் பற்றிச் சொல்லலாம் என்று தோன்றியது. வாரத்தில் 6-8 மணி நேரம் நேர்நிலையான செயல்பாடுக்காக கொடுத்தது ஒரு காரணம். மேலும், சமீபத்தில் நான் பங்கேற்ற எழுத்தாளர்/மருத்துவர் சுனில் கிருஷ்ணனின் ஆயுர்வேத அறிமுக வகுப்பிற்குப்… Continue reading

  • லங்காதகனம் – பிரபு

    சுந்தர காண்டத்தில் உள்ள இலங்கை எரியூட்டு படலத்தை பற்றி சில சொற்கள் முன்வைக்க நினைக்கிறேன். சுருக்கமாச் சொன்னால் சீதையைத் தேடிப் போகின்ற அனுமன் இலங்கையை எரிக்கின்றான்.  படலத்திற்குள் செல்வதற்கு முன் ஒரு வரலாற்று நிகழ்வில் இருந்து தொடங்குவோம். நமக்கு தெரிய சமீபத்தில் நடந்த பெரும் போர்களில் ஒன்று இரண்டாம் உலகப் போர். அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டை வீசும் போது அப்போர் முடிவுக்கு வருகிறது. அணுகுண்டை நாம்  நெருப்பின் நவீன வடிவம் (மாடர்ன்… Continue reading

  • போரும் குரங்கும் 2 – கமலநாதன், விஜயபாரதி

    கமலநாதன்: இலங்கை மாநகர் ஒரு குரங்கினால் சின்னாபின்னப் படுத்தப்படுகிறது. அரக்க வேந்தன் ஆர்வமாக போற்றிக் காத்த அசோகவனம் அழிக்கப்படுகிறது. எனவே இப்படி ஒரு ஆணை இடுகிறான், “வல்லையின் அகலா வண்ணம்,  வானையும் வழியை மாற்றி  கொல்லலிர் குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்தீர் என்றான் .” ஏதோ ஒரு சாதாரண குரங்கை பிடிக்கச் சென்று அதை அடித்து நசுக்கி விடாமல் என்னிடம் உயிருடன் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இடுகிறான். 60,000 கிங்கரர்களும், பஞ்ச சேனாதிபதிகளும், ஜம்புமாலியும் கொல்லப்படுகிறார்கள். இவர்கள்… Continue reading

  • போரும் அறமும் – முத்து

    ‘தாயே, நான் ராமனிடம் போய் சீதையைக்  கண்டேன். அங்கே சிறையில் இருக்கிறாள் என்று வெறும் செய்தியாக சொல்வதில் என்ன பயன்? எனவே என் தோளில்  உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களை அப்படியே கடல் கடந்து ராமனிடம் சேர்த்து விடுகிறேன்’ என்று யோசனை சொல்கிறான் அனுமன். சீதையோ, ‘இல்லை. நான் அப்படி செய்வதால் ராமனுக்கு களங்கம் ஏற்படும். என் நாயகன் ராமன் வரவேண்டும். ராவணன் செய்த அநீதிக்கு அவன் ராமன் கையால் தண்டிக்கப் படவேண்டும். என்னை வஞ்சித்த நாய் ராவணன்.… Continue reading