போர்
-
லங்காதகனம் – பிரபு
சுந்தர காண்டத்தில் உள்ள இலங்கை எரியூட்டு படலத்தை பற்றி சில சொற்கள் முன்வைக்க நினைக்கிறேன். சுருக்கமாச் சொன்னால் சீதையைத் தேடிப் போகின்ற அனுமன் இலங்கையை எரிக்கின்றான். படலத்திற்குள் செல்வதற்கு முன் ஒரு வரலாற்று நிகழ்வில் இருந்து தொடங்குவோம். நமக்கு தெரிய சமீபத்தில் நடந்த பெரும் போர்களில் ஒன்று இரண்டாம் உலகப் போர். அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டை வீசும் போது அப்போர் முடிவுக்கு வருகிறது. அணுகுண்டை நாம் நெருப்பின் நவீன வடிவம் (மாடர்ன்… Continue reading
-
போரும் குரங்கும் 2 – கமலநாதன், விஜயபாரதி
கமலநாதன்: இலங்கை மாநகர் ஒரு குரங்கினால் சின்னாபின்னப் படுத்தப்படுகிறது. அரக்க வேந்தன் ஆர்வமாக போற்றிக் காத்த அசோகவனம் அழிக்கப்படுகிறது. எனவே இப்படி ஒரு ஆணை இடுகிறான், “வல்லையின் அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றி கொல்லலிர் குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்தீர் என்றான் .” ஏதோ ஒரு சாதாரண குரங்கை பிடிக்கச் சென்று அதை அடித்து நசுக்கி விடாமல் என்னிடம் உயிருடன் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இடுகிறான். 60,000 கிங்கரர்களும், பஞ்ச சேனாதிபதிகளும், ஜம்புமாலியும் கொல்லப்படுகிறார்கள். இவர்கள்… Continue reading
-
போரும் அறமும் – முத்து
‘தாயே, நான் ராமனிடம் போய் சீதையைக் கண்டேன். அங்கே சிறையில் இருக்கிறாள் என்று வெறும் செய்தியாக சொல்வதில் என்ன பயன்? எனவே என் தோளில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களை அப்படியே கடல் கடந்து ராமனிடம் சேர்த்து விடுகிறேன்’ என்று யோசனை சொல்கிறான் அனுமன். சீதையோ, ‘இல்லை. நான் அப்படி செய்வதால் ராமனுக்கு களங்கம் ஏற்படும். என் நாயகன் ராமன் வரவேண்டும். ராவணன் செய்த அநீதிக்கு அவன் ராமன் கையால் தண்டிக்கப் படவேண்டும். என்னை வஞ்சித்த நாய் ராவணன்.… Continue reading
