கட்டுரை

  • அன்பென்ற ஒன்று : பார்கவி

    நாம் எதிர் நாயகர்களின் உலகில் வாழ்கிறோம். நவீன உலகில் வாழ்பவருக்கு மீட்பர்கள் மீதான நம்பிக்கை இயல்பாக இற்றுப் போய்விட்டது. காவியங்கள் போலவே காவிய நாயகர்கள் மீதான விமர்சனப்பார்வையும் கூர்மையாகிவிட்டன. காவிய உலகமும் ஒரு விதத்தில் எதிர் நிலை பாத்திரங்களுக்கானவை என்றாலும் இங்கு எதிர் நிலை கதாபாத்திரங்கள் ஆதர்சம் இல்லை என்பதே முக்கிய வேறுபாடு. கம்பன் தனது காவிய முயற்சியில் ராவணனை ஆசையில் அறிவிழந்த பித்தனாகவே சித்தரிக்கிறார். சீதையை தீக்குள் இறங்கச் சொன்ன அன்றே நாம் ராமனை சற்று… Continue reading

  • காயத்துயிரே விடு காலையினும் மாயத்தொழில் செய்யா அதிகாயன் – மதுநிகா சுரேஷ்

    நான் இம்பர்வாரி குழுவில் அதிகாயன் வதைப் படலம் குறித்து ஒரு உரை ஆற்றுவதற்காக அதிகாயனை பற்றிய குறிப்புகள் நூல்களில் தேடிக்கொண்டிருந்தேன். கும்பகர்ணன், வாலி, இந்திரஜித்தின் போன்ற பெரும் வீரர்களை பற்றி குறிப்புகள் கிடைத்தது. ஆனால் மாயத்தை பயன்படுத்தாமல் நேர்வழியில் போரிட்ட அதிகாயன் பற்றி யாரும் அதிகமாக எழுதவில்லை. எனக்கு அது வருத்தமாக இருந்தது. இதுவரை கம்பராமாயணம் குறித்து எழுதும் தைரியம் இல்லாத நான் அதிகாயனுக்காக எழுதுகிறேன். ஒரு மன்னனிடம் அறம் இருந்தால் மட்டுமே அவன் நிலையான அரசை நிறுவ முடியும் என்பதை… Continue reading

  • நெய்குழல் உறும் இழை – லக்ஷ்மி நாராயணன்

    “வளையொடு திகிரியும்‌, வடவை தீதரவிளைதரு கடுவுடை விரிகொள்‌ பாயலும்,‌இளையவர்கள்‌ என அடி பரவி ஏக நாம்வளைமதில்‌ அயோத்தியில்‌ வருதும்” (201, பால காண்டம்) வடவாமுகாக்கினியும் கரிந்து போகும் அளவிற்கு பொங்கு விஷம் (சினம்) கொண்ட ஆதிசேஷனின் அவதாரம் இலக்குவன். காப்பியம் முழுக்க ராமனைத் தொடர்ந்து வந்தாலும் கம்பராமாயண உரைகளிலோ, ஆய்வுகளிலோ அதிகம் பேசப்படாதவன் இலக்குவன். பரதனோ, குஹனோ, வீடணனைப்பற்றியோ எழுதப்பட்டதை விட இலக்குவன் பற்றி எழுதப்பட்டது மிகக்குறைவு. அனுமனைப் பற்றி சொல்லவே தேவை இல்லை. வனவாசம் ராமனுக்கு… Continue reading

  • ஆரண்யத்தால் அடைவன – ரா. சிவமீனாட்சி செல்லையா

    பண்டு, நமது மரபில் வனம் செல்வதென்பது நிகழ்வதே. துறந்தவர் மெய்மை நாடி செல்வர்; வயதில் முதிர்ந்தவர், தன்னிறுதி வனத்தில் நிகழ விழைந்து, வனப்பிரஸ்தம் மேற்கொள்வர்; வேந்தர்கள் வேட்டையாட தனித்தும் படை சூழவும் வனத்திற்கு ஏகுவர்; இவ்வாறும், இன்னும்  பலவகை காரணங்களுக்காகவும் வனம் புகுதல் நிகழலாம். நம்முடைய இரு பெரும் இதிகாசங்கள்  இரண்டிலும் கதை  நாயகர்கள் வனம்புகுதல் முக்கிய நிகழ்வாகிறது. அணுக்க உறவுகளின் மன இருளினால்  நாயகர்களை அல்லலுக்குள்ளாக்க திட்டமிடப்படும் அது, அவர்கள் பொலிவதற்கும், அரியனவற்றை அடைவதற்குமான காலமாய்… Continue reading

  • அருந்துயர், நெடுந்துயர் – பார்கவி

    [1] என் நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட நிபந்தனையுடன் புத்தகப் பரிந்துரை கேட்பதுண்டு. துயரத்தின் சாயலின்றி இருக்க வேண்டுமாம். அது தானே நம் வாழ்க்கையின் லட்சியமும். படக்கதைகளைக் கூட பரிந்துரைக்க முடியாத நிபந்தனை அது என்பதை முன்னெச்சரிக்கையாக சொல்லிவிடுவேன். துயரம் வெறும் துயரமாகவே கையளிக்கப் படக்கூடாது என்பதே அவர்களுடைய உள்ளக்கிடக்கையாக இருக்கக்கூடும். அத்தனை பேரிலக்கியங்களும் மானுட துயரின் வழியாக இன்னொன்றை பேசும் பொருட்டே எழுதப்பட்டிருக்கின்றன. அவை இருக்க மிகப் பெரும்பான்மையினர் தித்திப்பு காதல் அல்லது கூர்வன்முறை வகை புத்தகங்களை,… Continue reading

  • முளைப்பன முறுவல் – கலாதேவி

    அலிஸ் மன்றோவின் (Alice Munro) டியர் லைஃப் ( Dear Life ) என்ற சிறுகதைத் தொகுதியில் இருந்த Haven (புகலிடம்) என்ற சிறுகதையை வாசித்த பின் கொஞ்ச நேரம் அந்த கதையிலேயே உலாவிக் கொண்டிருந்தேன். கதை எழுபதுகளில் கனடாவில் உள்ள சிறு நகரத்தில் நடக்கிறது. கதை சொல்லி தனது சித்தியுடனும் சித்தப்பாவுடனும் வசிக்கும் பதின்மவயதுச் சிறுமி. அவளது பெற்றோர் ஆப்பிரிக்க நாடொன்றுக்கு சென்று விடுவதால் அவர்களுடன் வசிக்கிறாள். மிகவும் சுதந்திரமான பெண்ணான தனது அம்மாவிற்கும் கணவனின்… Continue reading

  • போரும் அறமும் – முத்து

    ‘தாயே, நான் ராமனிடம் போய் சீதையைக்  கண்டேன். அங்கே சிறையில் இருக்கிறாள் என்று வெறும் செய்தியாக சொல்வதில் என்ன பயன்? எனவே என் தோளில்  உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களை அப்படியே கடல் கடந்து ராமனிடம் சேர்த்து விடுகிறேன்’ என்று யோசனை சொல்கிறான் அனுமன். சீதையோ, ‘இல்லை. நான் அப்படி செய்வதால் ராமனுக்கு களங்கம் ஏற்படும். என் நாயகன் ராமன் வரவேண்டும். ராவணன் செய்த அநீதிக்கு அவன் ராமன் கையால் தண்டிக்கப் படவேண்டும். என்னை வஞ்சித்த நாய் ராவணன்.… Continue reading

  • அட்டிச் செம்மிய மிகைக் கனா – பரிமித்தா

    தானை காண் படலம் கிட்கிந்தைப் படலத்தின் தொடர்ச்சியாகும். கிட்கிந்தை படலத்தில் இலட்சுமணன் சுக்ரீவனைக் காண கிட்கிந்தைச் செல்கிறான். இலட்சுமணன் சுக்ரீவனிடம் கார்காலத்திற்குள் வந்து சேர வேண்டிய சேனையைப் பற்றி கேட்டு, அவனை இராமனிடம் அழைத்து வருகிறான். சுக்ரீவன் இராமனிடம் சேனைகள் ‘இன்று, நாளை’க்குள் அனுமனுடன் வந்துவிடும் என பதிலக்கிறான். இவ்வாறாக தானை காண் படலம் தொடங்குகிறது. தானை காண் படலம் என்றால், சுக்ரீவன் இராமலக்குவரிடம் ‘சேனையை காட்டும்‘ படலம் எனப் பொதுவாக பொருள்கொள்ளலாம். கிட்கிந்தைப் படலத்தில் சுக்ரீவன்… Continue reading

  • கம்பனில் கதிரோன் – சுதா ஸ்ரீனிவாசன்

    பாடப்புத்தகங்களிலும் பட்டிமன்றங்களிலும் அறிமுகமான கம்பனை முழுமையாக வாசிக்கும் முயற்சியில் பலமுறை அவனோடு கண்ணாமூச்சி ஆடிவிட்டு ஒரு வழியாக அதில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறோம். அவனது சொல்லாட்சியையும் சந்தத்தையும் உவமையையும் ஒவ்வொரு இடத்திலும் வியந்து தீரவில்லை. ஒரே விதமான பொருள்களை வர்ணிக்கும்போதும் அவனது உவமைகள் ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து மாறுபட்டே அமைந்துள்ளன. நகரங்களையும் மதில்களையும் அவற்றின் மாந்தரையும் பற்றி கூறும் வர்ணனைகளில் அயோத்திக்கும் மிதிலைக்கும் இலங்கைக்கும் வேறுபாட்டினை உணரமுடியும். மனிதரின் உணர்வுநிலைகளை கூறும் இடங்களோ பேசித் தீர்க்கமுடியாதவை, அதிலும் சுருங்கச் சொல்லி… Continue reading

  • காட்டின் நெறி – கா. சிவா

     2023 – ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று ஒரு உரையாடலில் “கம்பராமாயணத்திற்கு பல்வேறு உரைகள் உள்ளன. அதன் சொல்லாட்சிகளும் அழகியலும் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. கம்பராமாயணம் கூறும் வேல்யூஸ் (values) பற்றி இப்போது பேசப்படவேண்டும்” என வேறு சொற்களில் ஆசிரியர் ஜெயமோகன் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட வேல்யூ என்பதை விழுமியம் அல்லது நெறி என்று நான் எடுத்துக்கொண்டேன்.      கம்பராமாயணம் என்னும் காப்பியத்தில் நெறிகளை கம்பர் ஒட்டு மொத்தமாக ஒரேயிடத்தில் சொல்லாமல் கதையின் போக்கிற்கேற்ப  பொருத்தமான இடங்களில் கூறிச் செல்கிறார்.… Continue reading