கிட்கிந்தா காண்டம்

  • கீரையும் காயும் – பரிமித்தா

    ஒரு வாரநாளின் விடியல் தொடங்கியது. என் தாயார் பூஜையறையிலிருந்து தூபக்கல்லை எடுத்துக் கொண்டு வந்தார். ”புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி.. இந்தக் கீரைய மட்டும் எதுக்கு வெச்சிருக்கே?.. சுருங்கீறாதா அது, இதையும் சேர்த்துப் போடு” என்றார். ”வெட்டணும்” என்றேன் நான். சட்டென்று எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. “இது கீரை இல்ல தெரியுமா. சரியா சொல்லனும்னா கொடி. கம்பர் எழுதியிருக்கார். இது கரையோரத்தல தான் வளரும். இப்போ இந்த கொடி கொமர்ஷலைஸ்ட் ஆனதுனால… Continue reading

  • அட்டிச் செம்மிய மிகைக் கனா – பரிமித்தா

    தானை காண் படலம் கிட்கிந்தைப் படலத்தின் தொடர்ச்சியாகும். கிட்கிந்தை படலத்தில் இலட்சுமணன் சுக்ரீவனைக் காண கிட்கிந்தைச் செல்கிறான். இலட்சுமணன் சுக்ரீவனிடம் கார்காலத்திற்குள் வந்து சேர வேண்டிய சேனையைப் பற்றி கேட்டு, அவனை இராமனிடம் அழைத்து வருகிறான். சுக்ரீவன் இராமனிடம் சேனைகள் ‘இன்று, நாளை’க்குள் அனுமனுடன் வந்துவிடும் என பதிலக்கிறான். இவ்வாறாக தானை காண் படலம் தொடங்குகிறது. தானை காண் படலம் என்றால், சுக்ரீவன் இராமலக்குவரிடம் ‘சேனையை காட்டும்‘ படலம் எனப் பொதுவாக பொருள்கொள்ளலாம். கிட்கிந்தைப் படலத்தில் சுக்ரீவன்… Continue reading

  • மழைபொரு கண் இணை – விஜயலக்ஷ்மி ராஜ்குமார்

    நான் தமிழ் மரபிலக்கியங்களை அவ்வளவு  விரும்பி வாசித்தவள் கிடையாது. ஒரு காலத்தில் என்னை பொருத்தவரை வெறும் மனப்பாடப் பகுதிகள் அவை. தமிழ் பாடத்தில் சிறிது முயன்றால் மதிப்பெண்களை முழுமையாக பெற்று தரக்கூடிய வரப்பிரசாத பகுதிகள். மனப்பாடம் செய்து ஒன்றுக்கு ஐந்து தடவை எழுதிப் பார்த்தால் போதும். அப்படி எப்போதோ தமிழ் போட்டிக்காக மனனம் செய்த சிலப்பதிகாரப்பகுதி ஒன்று இன்றும் நினைவில் உள்ளது. இத்தனை வருடங்களுக்கு பிறகு என்னை கம்பனில் இறக்கி விட்டது இம்பார்வாரி குழு. அவர்கள் 300… Continue reading

  • காட்டின் நெறி – கா. சிவா

     2023 – ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று ஒரு உரையாடலில் “கம்பராமாயணத்திற்கு பல்வேறு உரைகள் உள்ளன. அதன் சொல்லாட்சிகளும் அழகியலும் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. கம்பராமாயணம் கூறும் வேல்யூஸ் (values) பற்றி இப்போது பேசப்படவேண்டும்” என வேறு சொற்களில் ஆசிரியர் ஜெயமோகன் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட வேல்யூ என்பதை விழுமியம் அல்லது நெறி என்று நான் எடுத்துக்கொண்டேன்.      கம்பராமாயணம் என்னும் காப்பியத்தில் நெறிகளை கம்பர் ஒட்டு மொத்தமாக ஒரேயிடத்தில் சொல்லாமல் கதையின் போக்கிற்கேற்ப  பொருத்தமான இடங்களில் கூறிச் செல்கிறார்.… Continue reading