ரசனைக் குறிப்பு

  • செஞ்சொற் கவி இன்பம் – பார்கவி

    காதலினால் மானிடற்கு கவிதைகள் உண்டாம் என்ற பாரதி, கல்யாணம் செய்துகொண்டால் என்னாகும் என்று சொல்லவில்லை. இன்று இந்த வரியை வாசிப்பவர்கள், இதற்குப் பகடியாக பதிலை சொல்லிவிட முடியும். நவீன கவிதைகளில், காதல் ஏற்றப்பட்ட அளவுக்கு திருமண உறவு ஏற்றம் பெறவில்லை. இந்தப் பிளவு வள்ளுவரிலும் உண்டு. காமத்துப்பாலில் ‘இல்வாழ்க்கை’யும் ‘வாழ்க்கைத் துணைநல’மும் ‘மக்கட்பேறு’ம் இல்லை. அவை அறத்துப்பாலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்றன. இத்தனைக்கும் காமத்துப்பாலில் சங்கமரபின்படி ‘களவியல்’ ‘கற்பியல்’ இரண்டுமே அமைந்திருக்கிறது. பிரிந்தவர் கூடி,… Continue reading

  • நிலமகள் முகமோ – மருதுபாண்டியன்

    ஜெயமோகன் ‘எழுதும் கலை’ புத்தகத்தில் கதை எழுதுவது பற்றி சொல்கையில், எழுத்தாளன் கதையை சொல்லக்கூடாது, கண்ணில் காட்ட வேண்டும் என்பார். அப்படி கண்ணால் காட்டுவதன் உச்சமாகத்தான் நான் கம்பராமாயணத்தைப் பார்க்கிறேன். அதுவும் நிலக்காட்சிகளையும் ஊர்க்காட்சிகளையும் கம்பன் தன் வார்த்தைகளால் நம் மனதில் கட்டியெழுப்பும்போது ஏற்படும் அனுபவம் மிகவும் பரவசமூட்டுவது. கம்பன் அயோத்தியைப் பற்றி கூறும்போது, சந்திரனும் சூரியனும் நாள்தோறும் கண் இமைக்காமல் வானிலே சுற்றி வரக் காரணம், இந்நகரை காண வேண்டும் என்பதற்காகத்தான். மாயோன் மார்பில் நல்மணிகள்… Continue reading

  • கீரையும் காயும் – பரிமித்தா

    ஒரு வாரநாளின் விடியல் தொடங்கியது. என் தாயார் பூஜையறையிலிருந்து தூபக்கல்லை எடுத்துக் கொண்டு வந்தார். ”புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி.. இந்தக் கீரைய மட்டும் எதுக்கு வெச்சிருக்கே?.. சுருங்கீறாதா அது, இதையும் சேர்த்துப் போடு” என்றார். ”வெட்டணும்” என்றேன் நான். சட்டென்று எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. “இது கீரை இல்ல தெரியுமா. சரியா சொல்லனும்னா கொடி. கம்பர் எழுதியிருக்கார். இது கரையோரத்தல தான் வளரும். இப்போ இந்த கொடி கொமர்ஷலைஸ்ட் ஆனதுனால… Continue reading

  • மழைபொரு கண் இணை – விஜயலக்ஷ்மி ராஜ்குமார்

    நான் தமிழ் மரபிலக்கியங்களை அவ்வளவு  விரும்பி வாசித்தவள் கிடையாது. ஒரு காலத்தில் என்னை பொருத்தவரை வெறும் மனப்பாடப் பகுதிகள் அவை. தமிழ் பாடத்தில் சிறிது முயன்றால் மதிப்பெண்களை முழுமையாக பெற்று தரக்கூடிய வரப்பிரசாத பகுதிகள். மனப்பாடம் செய்து ஒன்றுக்கு ஐந்து தடவை எழுதிப் பார்த்தால் போதும். அப்படி எப்போதோ தமிழ் போட்டிக்காக மனனம் செய்த சிலப்பதிகாரப்பகுதி ஒன்று இன்றும் நினைவில் உள்ளது. இத்தனை வருடங்களுக்கு பிறகு என்னை கம்பனில் இறக்கி விட்டது இம்பார்வாரி குழு. அவர்கள் 300… Continue reading