துயர்
-
அருந்துயர், நெடுந்துயர் – பார்கவி
[1] என் நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட நிபந்தனையுடன் புத்தகப் பரிந்துரை கேட்பதுண்டு. துயரத்தின் சாயலின்றி இருக்க வேண்டுமாம். அது தானே நம் வாழ்க்கையின் லட்சியமும். படக்கதைகளைக் கூட பரிந்துரைக்க முடியாத நிபந்தனை அது என்பதை முன்னெச்சரிக்கையாக சொல்லிவிடுவேன். துயரம் வெறும் துயரமாகவே கையளிக்கப் படக்கூடாது என்பதே அவர்களுடைய உள்ளக்கிடக்கையாக இருக்கக்கூடும். அத்தனை பேரிலக்கியங்களும் மானுட துயரின் வழியாக இன்னொன்றை பேசும் பொருட்டே எழுதப்பட்டிருக்கின்றன. அவை இருக்க மிகப் பெரும்பான்மையினர் தித்திப்பு காதல் அல்லது கூர்வன்முறை வகை புத்தகங்களை,… Continue reading
-
மழைபொரு கண் இணை – விஜயலக்ஷ்மி ராஜ்குமார்
நான் தமிழ் மரபிலக்கியங்களை அவ்வளவு விரும்பி வாசித்தவள் கிடையாது. ஒரு காலத்தில் என்னை பொருத்தவரை வெறும் மனப்பாடப் பகுதிகள் அவை. தமிழ் பாடத்தில் சிறிது முயன்றால் மதிப்பெண்களை முழுமையாக பெற்று தரக்கூடிய வரப்பிரசாத பகுதிகள். மனப்பாடம் செய்து ஒன்றுக்கு ஐந்து தடவை எழுதிப் பார்த்தால் போதும். அப்படி எப்போதோ தமிழ் போட்டிக்காக மனனம் செய்த சிலப்பதிகாரப்பகுதி ஒன்று இன்றும் நினைவில் உள்ளது. இத்தனை வருடங்களுக்கு பிறகு என்னை கம்பனில் இறக்கி விட்டது இம்பார்வாரி குழு. அவர்கள் 300… Continue reading
