-
முளைப்பன முறுவல் – கலாதேவி
அலிஸ் மன்றோவின் (Alice Munro) டியர் லைஃப் ( Dear Life ) என்ற சிறுகதைத் தொகுதியில் இருந்த Haven (புகலிடம்) என்ற சிறுகதையை வாசித்த பின் கொஞ்ச நேரம் அந்த கதையிலேயே உலாவிக் கொண்டிருந்தேன். கதை எழுபதுகளில் கனடாவில் உள்ள சிறு நகரத்தில் நடக்கிறது. கதை சொல்லி தனது சித்தியுடனும் சித்தப்பாவுடனும் வசிக்கும் பதின்மவயதுச் சிறுமி. அவளது பெற்றோர் ஆப்பிரிக்க நாடொன்றுக்கு சென்று விடுவதால் அவர்களுடன் வசிக்கிறாள். மிகவும் சுதந்திரமான பெண்ணான தனது அம்மாவிற்கும் கணவனின்… Continue reading
-
நிலமகள் முகமோ – மருதுபாண்டியன்
ஜெயமோகன் ‘எழுதும் கலை’ புத்தகத்தில் கதை எழுதுவது பற்றி சொல்கையில், எழுத்தாளன் கதையை சொல்லக்கூடாது, கண்ணில் காட்ட வேண்டும் என்பார். அப்படி கண்ணால் காட்டுவதன் உச்சமாகத்தான் நான் கம்பராமாயணத்தைப் பார்க்கிறேன். அதுவும் நிலக்காட்சிகளையும் ஊர்க்காட்சிகளையும் கம்பன் தன் வார்த்தைகளால் நம் மனதில் கட்டியெழுப்பும்போது ஏற்படும் அனுபவம் மிகவும் பரவசமூட்டுவது. கம்பன் அயோத்தியைப் பற்றி கூறும்போது, சந்திரனும் சூரியனும் நாள்தோறும் கண் இமைக்காமல் வானிலே சுற்றி வரக் காரணம், இந்நகரை காண வேண்டும் என்பதற்காகத்தான். மாயோன் மார்பில் நல்மணிகள்… Continue reading
-
போரும் அறமும் – முத்து
‘தாயே, நான் ராமனிடம் போய் சீதையைக் கண்டேன். அங்கே சிறையில் இருக்கிறாள் என்று வெறும் செய்தியாக சொல்வதில் என்ன பயன்? எனவே என் தோளில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களை அப்படியே கடல் கடந்து ராமனிடம் சேர்த்து விடுகிறேன்’ என்று யோசனை சொல்கிறான் அனுமன். சீதையோ, ‘இல்லை. நான் அப்படி செய்வதால் ராமனுக்கு களங்கம் ஏற்படும். என் நாயகன் ராமன் வரவேண்டும். ராவணன் செய்த அநீதிக்கு அவன் ராமன் கையால் தண்டிக்கப் படவேண்டும். என்னை வஞ்சித்த நாய் ராவணன்.… Continue reading
-
அட்டிச் செம்மிய மிகைக் கனா – பரிமித்தா
தானை காண் படலம் கிட்கிந்தைப் படலத்தின் தொடர்ச்சியாகும். கிட்கிந்தை படலத்தில் இலட்சுமணன் சுக்ரீவனைக் காண கிட்கிந்தைச் செல்கிறான். இலட்சுமணன் சுக்ரீவனிடம் கார்காலத்திற்குள் வந்து சேர வேண்டிய சேனையைப் பற்றி கேட்டு, அவனை இராமனிடம் அழைத்து வருகிறான். சுக்ரீவன் இராமனிடம் சேனைகள் ‘இன்று, நாளை’க்குள் அனுமனுடன் வந்துவிடும் என பதிலக்கிறான். இவ்வாறாக தானை காண் படலம் தொடங்குகிறது. தானை காண் படலம் என்றால், சுக்ரீவன் இராமலக்குவரிடம் ‘சேனையை காட்டும்‘ படலம் எனப் பொதுவாக பொருள்கொள்ளலாம். கிட்கிந்தைப் படலத்தில் சுக்ரீவன்… Continue reading
-
கீரையும் காயும் – பரிமித்தா
ஒரு வாரநாளின் விடியல் தொடங்கியது. என் தாயார் பூஜையறையிலிருந்து தூபக்கல்லை எடுத்துக் கொண்டு வந்தார். ”புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி.. இந்தக் கீரைய மட்டும் எதுக்கு வெச்சிருக்கே?.. சுருங்கீறாதா அது, இதையும் சேர்த்துப் போடு” என்றார். ”வெட்டணும்” என்றேன் நான். சட்டென்று எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. “இது கீரை இல்ல தெரியுமா. சரியா சொல்லனும்னா கொடி. கம்பர் எழுதியிருக்கார். இது கரையோரத்தல தான் வளரும். இப்போ இந்த கொடி கொமர்ஷலைஸ்ட் ஆனதுனால… Continue reading
-
மழைபொரு கண் இணை – விஜயலக்ஷ்மி ராஜ்குமார்
நான் தமிழ் மரபிலக்கியங்களை அவ்வளவு விரும்பி வாசித்தவள் கிடையாது. ஒரு காலத்தில் என்னை பொருத்தவரை வெறும் மனப்பாடப் பகுதிகள் அவை. தமிழ் பாடத்தில் சிறிது முயன்றால் மதிப்பெண்களை முழுமையாக பெற்று தரக்கூடிய வரப்பிரசாத பகுதிகள். மனப்பாடம் செய்து ஒன்றுக்கு ஐந்து தடவை எழுதிப் பார்த்தால் போதும். அப்படி எப்போதோ தமிழ் போட்டிக்காக மனனம் செய்த சிலப்பதிகாரப்பகுதி ஒன்று இன்றும் நினைவில் உள்ளது. இத்தனை வருடங்களுக்கு பிறகு என்னை கம்பனில் இறக்கி விட்டது இம்பார்வாரி குழு. அவர்கள் 300… Continue reading
-
கம்பனில் கதிரோன் – சுதா ஸ்ரீனிவாசன்
பாடப்புத்தகங்களிலும் பட்டிமன்றங்களிலும் அறிமுகமான கம்பனை முழுமையாக வாசிக்கும் முயற்சியில் பலமுறை அவனோடு கண்ணாமூச்சி ஆடிவிட்டு ஒரு வழியாக அதில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறோம். அவனது சொல்லாட்சியையும் சந்தத்தையும் உவமையையும் ஒவ்வொரு இடத்திலும் வியந்து தீரவில்லை. ஒரே விதமான பொருள்களை வர்ணிக்கும்போதும் அவனது உவமைகள் ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து மாறுபட்டே அமைந்துள்ளன. நகரங்களையும் மதில்களையும் அவற்றின் மாந்தரையும் பற்றி கூறும் வர்ணனைகளில் அயோத்திக்கும் மிதிலைக்கும் இலங்கைக்கும் வேறுபாட்டினை உணரமுடியும். மனிதரின் உணர்வுநிலைகளை கூறும் இடங்களோ பேசித் தீர்க்கமுடியாதவை, அதிலும் சுருங்கச் சொல்லி… Continue reading
-
காட்டின் நெறி – கா. சிவா
2023 – ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று ஒரு உரையாடலில் “கம்பராமாயணத்திற்கு பல்வேறு உரைகள் உள்ளன. அதன் சொல்லாட்சிகளும் அழகியலும் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. கம்பராமாயணம் கூறும் வேல்யூஸ் (values) பற்றி இப்போது பேசப்படவேண்டும்” என வேறு சொற்களில் ஆசிரியர் ஜெயமோகன் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட வேல்யூ என்பதை விழுமியம் அல்லது நெறி என்று நான் எடுத்துக்கொண்டேன். கம்பராமாயணம் என்னும் காப்பியத்தில் நெறிகளை கம்பர் ஒட்டு மொத்தமாக ஒரேயிடத்தில் சொல்லாமல் கதையின் போக்கிற்கேற்ப பொருத்தமான இடங்களில் கூறிச் செல்கிறார்.… Continue reading
-
யுக சந்திகளில் வளையும் அறம் – அருணாச்சலம் மகாராஜன்
[1] காந்தி வலதுசாரியா, இடதுசாரியா? இன்றைய நிலையில் அவர் தீவிரமான, முற்போக்கு இடதுசாரியாகவே அறியப்படுவார். காந்தியின் கொள்கைகள், சிந்தனைகள் அவரை இடதுசாரி சாய்வுள்ளவராகக் காட்டினாலும் அவர் நிச்சயமாக வலதுசாரி சிந்தனைகளையோ, கொள்கைகளையோ ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல என அவரை அறிந்த, வாசித்த எவராலும் உறுதியாகக் கூறவியலும். ஆனால் காந்தியும் வலதுசாரி என அழைக்கப்பட்டிருந்தார். அவர் மட்டுமல்ல, அவருடைய கருத்துக்களை, கொள்கைகளை ஏற்றுக் கொண்ட அவரது நெருங்கிய பிற காங்கிரஸ் சகாக்களான பட்டேல், ராஜேந்திர பிரசாத், கோவிந்த வல்லப் பந்த்,… Continue reading
-
சீதாராமன் – ஜமீலா கணேசன்
அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தில் நான் வசிக்கும் சிறு நகரில் சமீபத்தில் ஒரு ரத ஊர்வலம் இஸ்கான் அமைப்பால் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் நம்ம ஊர் போலவே ரதத்தின் கயிற்றை மக்கள் பிடித்து இழுக்க தேர் பூபோல நகர்ந்து சென்றது. தேர் முன் செல்ல பின்னர் கிருஷ்ணன், ராமன் என பல கடவுளர் வேடமிட்டவர்கள் நடக்க, பார்க்கும் இந்தியர்களும் அமெரிக்கர்களுடன் சேர்ந்து கரகோஷமிட்டார்கள் கிருஷ்ணா வேடமிட்டவர் சக்கரத்தை ஏந்தி இருந்தார் கிருஷ்ணன் அந்தக் காலத்திலேயே வில்… Continue reading
